இலங்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Published

on

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

உற்பத்திக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவான வேகத்தில் விரிவடைதலை வெளிப்படுத்தியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது மத்திய வங்கியின் உள்ளக விசாரணை என்பதால் விபரங்களை குறிப்பிடுவது பொருத்தமானதல்ல என மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

Exit mobile version