இலங்கை

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Published

on

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும் மற்றும் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற டிப்ளோமா வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” இலங்கையின் கல்விப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவு தொடர்பான விடயதானங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்முனைவு பற்றிய கல்வியை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனாலேயே இந்த சமூகம் முன்னேறவில்லை. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும், வேலைகளை உருவாக்க வேண்டும்.

இதுதான் நாட்டுக்கு தேவை, இதை பற்றி பேச வேண்டும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து தொழில்முனைவோராகுங்கள்.

இந்த தொழில்முனைவோர் கருத்தை சமூகமயமாக்க நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன்.

பாரம்பரியத்திற்கு புறம்பாக எப்படி சிந்திப்பது? ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவா? வித்தியாசமாக சிந்திக்கவா? அப்படி நினைப்பதனூடாக இலக்குகளை அடைய முடியுமென நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.

Exit mobile version