இலங்கை

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Published

on

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகள் குறித்து தபால் திணைக்களம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளை பயன்படுத்துவதற்கு தடை என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமெனவும் நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version