இலங்கை

ராஜபக்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள வசந்த சமரசிங்க

Published

on

ராஜபக்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள வசந்த சமரசிங்க

ராஜபக்சர்களின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசு விசாரணையைத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

பிணைமுறி ஊழல், ஈஸ்டர் தாக்குதல், லசந்த விக்ரமதுங்க கொலை, தாஜுதீன் கொலை, எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விடயம், 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை, கப்பல்களுக்கு உரம் ஏற்றுவது, எயார்பஸ் பேரம் ஆகியவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவை காட்டிவிட்டு துபாய் கணக்குகளுக்கு பணம் எப்படி மாற்றப்பட்டது என்பதை கண்டுபிடிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினைக்கிறார்.

அத்துடன், ரவி வித்யலங்காரவுடன் டீல் பேசி மறைக்கப்பட்ட கோப்புக்களை கண்டுபிடிக்க மாட்டோம் என்றும் நாமல் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

உகண்டாவில் மாத்திரமல்ல அபுதாபியில் இருந்தாலும் ராஜபக்சர்களின் ஊழல்கள் தொடர்பில் விசாரிப்போம்.

எனவே, திருடர்கள் வரிசையாக செய்து வந்த அனைத்து திருட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.

Exit mobile version