இலங்கை

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

Published

on

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுவுடன் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023 இலக்கம் 09 ஐ கொண்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80 (01) (P), 82 (01) (E), 82 (02), 89, 90 (04) ஆகிய சரத்துக்களின் படி, வாக்களிப்பு நாள் அறிவிக்கப்பட்ட நாள் வரையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் 80 (01) (பி), 82 (01) (இ), 82 (02), 89, 90 (04) ஆகிய பிரிவுகளின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியுடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

மேலும், சரத்து 99 A இன் படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள், வேட்பு மனுவுடன், தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

வேட்புமனுவுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையையும் சமர்ப்பிக்கத் தவறினால், அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version