இலங்கை

இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்ட,பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை

Published

on

பிரித்தானிய கடற்படை அதிகாரி ஒருவரின் அஸ்தியை இலங்கையில் உள்ள மூலோபாய தளத்தில் கரைக்கவேண்டும் என்ற இறக்கும் முன்னதாக அவரின் விருப்பம், அவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்ட் திருகோணமலையில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இந்த பதவி, இரண்டாம் உலகப் போரின் போது, இலங்கை நாட்டின் கிழக்குக் கடற்கரையில் நேச நாட்டுப் படைகளுக்கு ஒரு முக்கிய பதவியாக கருதப்பட்டுள்ளது. எனினும், தமது ஸ்கோஃபீல்டின் விருப்பம் அதிகாரத்துவ தடைகளால் தாமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சாம்பலைச் தூவும் நடைமுறையை நாடு தடைசெய்துள்ளதால் அதற்கு இடமளிக்க முடியவில்லை என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துவந்தது.

எனினும், இராஜதந்திர வழிகள் மூலம் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரது மனைவியான மேரியின் அஸ்தியும் கடந்த வெள்ளிக்கிழமை(27) திருகோணமலையில் ஒன்றாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 14 இலங்கையின் கடற்படை உறுப்பினர்களின் மரியாதையுடன் பிரித்தானிய அதிகாரி மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் அஸ்திகள், திருகோணமலை கடற்படை கப்பல்துறையின் ஒஸ்டன்பேர்க் முனைக்கு அருகில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடம் முன்னதாக பிரித்தானிய அதிகாரியின் இதயத்திற்கு மிகவும் பிடித்த இடம் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய இராஜதந்திரி டேரன் வூட்ஸடன் கடற்படைத் தளபதி பிரியந்த பெரேராவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

ஸ்கோஃபீல்ட் 1957 இல் திருகோணமலையில் பணியாற்றினார், அப்போது திருகோணமலை துறைமுகம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டிருந்தது.

Exit mobile version