இலங்கை

மின் கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு

Published

on

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால், புதிய நாடாளுமன்ற அமர்வின் பின்னரே ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலின் பின்னரே மீண்டும் நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version