இலங்கை

யாழில் மனைவியின் கையை துண்டித்த கணவன்: விசாரணையில் வெளியான பின்னணி

Published

on

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது, “சந்தேகநபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, சந்தேகநபரின் எச்சரிக்கைகளையும் மீறி மனைவி வீட்டின் அறைக்குள் இரகசியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ள நிலையில் அதனை அவதானித்த சந்தேநபர் மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த 41 வயதுடைய பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபரும் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு கையை இழந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதன் படி, மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version