இலங்கை

தேசபந்து தென்னகோன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தள்ளுபடி

Published

on

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொலிஸ் மா அதிபராக, செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) தள்ளுபடி செய்துள்ளது.

பெல்லன்வில தம்மரதன தேரர், வண.பேராசிரியர் அகலகட சிரிசுமண தேரர் மற்றும் பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல ஆகியோர் இந்த இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தலையீட்டு மனு, நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இடையீட்டு மனுவில் உள்ள உள்ளடக்கம் வழக்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version