இலங்கை

ஏனைய தரப்புக்கு பிரசாரம் செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

Published

on

ஏனைய தரப்புக்கு பிரசாரம் செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

சில ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏனைய வேட்பாளர்களை பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏனைய வேட்பாளர்களின் சார்பில் பிரசாரம் செய்வோர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் சில வேட்பாளர்கள் வேறும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் முற்று முழுதாக சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

Exit mobile version