இலங்கை

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

Published

on

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை இலங்கையின் தேர்தல் களம் அரசியல் ரீதியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சிக்கல்கள் நிறைந்த அரசியல் ஆய்வாளர்களால் கூட ஒரு வரையறைக்கு வர முடியாத தேர்தலாக காணப்படுகின்றது.

ஜனாதிபதித்தேர்தல் முறைமை ஆரம்பித்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இருமுனை தேர்தல் போட்டிதான் இருந்து வந்துள்ளது.

ஆனால், வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மும்முனை போட்டி தேர்தலிலே வந்துள்ளது.

இந்நிலையில், இவை இவ்வாறிருக்க வடக்கு கிழக்கு தமிழ் அரசியலை பொறுத்த வரையில் 47 வருடங்களுக்கு பின்னரும் தேசிய நீரோட்டத்திலே தமிழ் மக்கள் சேராத நிலைமை தற்போதும் இருக்கின்றதா? இதற்கான காரணம் தான் என்ன.இவ்வாறு பல்வேறுபட்ட மாற்றங்களை, எதிர்பார்ப்புக்களை இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் இதன் ஊடான விளைவுகள் என்ன என்பதை செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டு மக்கள் அறிந்து கொள்ளப்போகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் உலகத்திற்கே ஒரு அதிர்ச்சியான முடிவாகக் கூட இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version