இலங்கை

வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து நடைமுறைக்கு வரும் புதிய விடயம்

Published

on

வாக்குப்பெட்டியை வெளியில் தெரியும்படியான பையில் பூட்டு போட்டு வாக்கு எண்ணும் மண்டபத்திற்கு கொண்டுவரும் முறை நடைமுறைப்படுத்தபடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற வாக்குப்பெட்டிகள் எந்த மாற்றமுமின்றி உரிய வாக்கு எண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வரப்படுமா என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள், சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் சந்தேகத்தை நீக்கும் நடவடிக்கையாக கடந்த தேர்தல்களின் போது வாக்குப்பெட்டியை வெளியில் தெரியும்படியான பையில் பூட்டு போட்டு கொண்டு வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நடைமுறையே இந்த தேர்தலிலும் நடைமுறைப்படுத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு எந்த முறைகேடும் நடக்காது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

Exit mobile version