இலங்கை

வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர

Published

on

வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இலட்சக்கணக்கான வாக்குகளால் வெற்றிபெறும் என்பதால், மாற்றத்திற்கு எதிரானவர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) வடக்கு மக்களுக்கு சற்று காரசாரமாக பேசியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எடுத்த தீர்மானம் தென்னிலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் தீர்மானத்திற்கு எதிரானது.

சுமந்திரன் யாருக்கு எதிராக சஜித் பிரேமதாசவிடம் வாக்கு கேட்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன். இந்த மாற்றத்திற்கு எதிராக தெற்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரள்கின்றனர்.

சமூகமே ஒரு புதிய மாற்றத்தைக் கோருகிறது. முழு நாட்டிற்கும் ஒரு புதிய மாற்றம் தேவை. அந்த மாற்றத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும். தெற்கில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.

இந்த நாட்டிற்கு புதிய மாற்றம் தேவை. பழைய பாதையில் முன்னோக்கிச் செல்ல வடக்கு மக்களை ஆதரிக்க வேண்டுமா? பழைய வீதியை விட்டுவிட்டு புதிய வீதிக்கு ஒன்றுபடுமாறு வடக்கு மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே, தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு, இந்தப் புதிய மாற்றத்துக்கு எதிரான முடிவாகும். 2010, 2015, 2019 ராஜபக்சேவுக்கு எதிரான முடிவு. ஆனால் 2024 முடிவு மாற்றத்திற்கு எதிரான முடிவு.

இந்த மாற்றத்தை எதிர்க்கும் முடிவை கல்வியாளர்களும், பேராசிரியர்களும் அங்கீகரிக்கிறார்களா? இந்த மாற்றத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாற்றத்திற்கு எதிராக இருக்காதீர்கள். நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன், நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மாற்றத்தை கோரும் போது யாழ்ப்பாணத்தில் உங்களால் மட்டும் எப்படி அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட முடியும்?

ஆனால் இந்த யாழ்ப்பாணம் வெற்றியின் அங்கமாக மாறட்டும். அந்த மகத்தான மாற்றத்தின் எதிர்ப்பாளர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள் என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version