இலங்கை

இலங்கை கடற்படையிலிருந்து வெளியேறியுள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள்

Published

on

இலங்கை கடற்படையிலிருந்து வெளியேறியுள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள்

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002 மாலுமிகளும் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், 2019 முதல் 2023 வரை கடற்படை 537 அதிகாரிகளையும் 17,734 மாலுமிகளையும் பணியமர்த்தியுள்ளது.

இதன்போது ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை முறையே 580 மற்றும் 17,734 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிலையை தணிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version