இலங்கை

மீண்டும் வடக்கிற்கான யாழ்தேவி தொடருந்து சேவை : நாமல் அளித்துள்ள உறுதிமொழி

Published

on

மீண்டும் வடக்கிற்கான யாழ்தேவி தொடருந்து சேவை : நாமல் அளித்துள்ள உறுதிமொழி

தற்போதைய அரச நிர்வாகத்தின் கீழ் செயற்திறன் இன்மை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி தொடருந்து சேவைகளை தமது அரசாங்கத்தின் கீழ் மீள ஆரம்பிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa), உறுதியளித்துள்ளார்.

30 வருட கால யுத்தத்தை முடித்த பின்னர் வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து பாதைகளை ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகரமாக நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி தொடருந்து பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது.எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் நீளமான தொடருந்து பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version