இலங்கை

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி பலர் பலி!

Published

on

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி பலர் பலி!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போகமுவ தெதுரு ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற ஒன்பது மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் அவர்களுடைய தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாரவில – குருசா தேவாலயத்திற்கு அருகில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கல்பிட்டி இலுப்பத்தீவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 65 வயதுடைய ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் இத்தேபான – மேல் கந்தயகிரல பிரதேசத்தில் உள்ள அதவெதுன்வெவ நீர் குளியலில் குளிப்பதற்கு சென்ற இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version