இலங்கை

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Published

on

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

தென் கொரியாவில் (South Korea) கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற மேலும் 120 பேர் கொண்ட குழுவொன்று நேற்று (25) தென் கொரியாவுக்குச் சென்றுள்ளது.

இலங்கையின் (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர், தென்கொரிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு இந்த தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதேவேளை, கடந்த ஆறாம் திகதியும் தென் கொரியாவில் உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற 100 இலங்கையர்கள் தென் கொரியாவுக்குச் சென்றனர்.

Exit mobile version