இலங்கை

அதி தீவிர சிங்கள வாக்குளை மட்டும் நம்பும் நாமல் …! பகிரங்கப்படுத்தும் சுமந்திரன்

Published

on

அதி தீவிர சிங்கள வாக்குளை மட்டும் நம்பும் நாமல் …! பகிரங்கப்படுத்தும் சுமந்திரன்

அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதே நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) நோக்கம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தல் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம்.

சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார்.

அது அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதை நோக்கமாக கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம்.

தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத் தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம் தமிழரசுக் கட்சியின் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version