இலங்கை

கொழும்பில் ஆயுதங்களுடன் சிக்கிய கும்பல் – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

Published

on

கொழும்பு, ராஜகிரியவில் 7 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

T-56 துப்பாக்கி, மைக்ரோ பிஸ்டல் ரக துப்பாக்கி, 300 ரவைகள், T-56 ரவைகள் மற்றும் 50, 9mm ரவைகள் 50 என்பன கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக கொழும்பை மையப்படுத்தி பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version