இலங்கை

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள்

Published

on

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள்

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த பலர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

ஒன்லைனில் பதிவு செய்திருந்தாலும், சேவைகளைச் செய்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டதாக குழு தெரிவித்துள்ளது.

சில மணிநேரம் வரிசையில் காத்திருந்து, திணைக்களத்திற்குள் நுழைந்தனர், ஆனால் போதுமான வெளிநாட்டு கடவுச்சீட்டு புத்தகங்கள் இல்லை என்று அதிகாரிகள் அறிவித்ததால் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம் கேட்க பலமுறை ஊடகங்களினால் முயற்சிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தொலைபேசியில் பதிலளிக்காததால் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version