இலங்கை
உள்நாட்டு உற்பத்தி அழிவை சந்திக்கும்: முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு
விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு உற்பத்தி அழிவை சந்திக்கும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிகள் தட்டுப்பாடின்றி வழங்க வாய்ப்பு உள்ளதாக அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.