Connect with us

இலங்கை

தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் நடவடிக்கை

Published

on

2

தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் நடவடிக்கை

காங்கேசன்துறை உள்ளிட்ட பல தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு கனேடிய முதலீட்டாளர்களுடன் இணைந்து அரச – தனியார் கூட்டு முயற்சியில் 4 கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ”திருகோணமலை, காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் உள்ளிட்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு கனேடிய முதலீட்டாளர்களுடன் இணைந்து அரச – தனியார் கூட்டு முயற்சியில் 4 கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கேசன்துறையில் சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 35 முதலீட்டு வேலைத்திட்டங்களுக்காக 800 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவ்வாண்டில் எமது இலக்கு ஒரு பில்லியன் டொலர் என்ற போதிலும், 2 பில்லியன் டொலர் வரை முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் ஊடாக வரி அற்ற ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

ஏற்கனவே இது தொடர்பில் வழங்கியுள்ள கோட்டாவை அதிகரிக்குமாறு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இலங்கைக்கு இலாபம் கிடைக்கும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் முதலீடுகள் குறைவடையலாம். இது எந்தவொரு நாட்டிலும் தேர்தல் காலங்களில் வழமையாக இடம்பெறுவதாகும்.

எவ்வாறிருப்பினும் இந்த காலப்பகுதியில் முதலீட்டு சபையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொருளாதார பரிவர்த்தனை சட்டத்துக்கமைய பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் பணி பொருளாதாரம் குறித்த பிரசாரங்களை முன்னெடுப்பதாகும்.

இதற்கான செயற்திட்டங்கள் இலங்கையில் முதலீடு என்ற தொனிப்பொருளின் கீழ் அதன் முகவரகங்களால் முன்னெடுக்கப்படும்.”என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 16.09.2024 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம், கடக ராசியில் உள்ள சேர்ந்த புனர்பூசம், பூசம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 15 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 15.09.2024, குரோதி வருடம் ஆவணி 30, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 14.09.2024 , குரோதி வருடம் ஆவணி 29, சனிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தை...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2024, குரோதி வருடம் ஆவணி 27, வியாழக்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 9, 2024, குரோதி வருடம் ஆவணி 24, திங்கட்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8, 2024, குரோதி வருடம் ஆவணி 23, ஞாயிற்று...