இலங்கை

விபத்தில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலியான பெண் : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

Published

on

விபத்தில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலியான பெண் : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

கொழும்பில் (Colombo) இருந்து வவுனியா (Vavuniya) நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது நொச்சியாகம பகுதியில் நேற்று (30) இடம்பெற்றுள்ள நிலையில், இந்த விபத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவியே முகங்கொடுத்துள்ளனர்.

அத்தோடு, ராஜாங்கனை யாய 15 இல் வசிக்கும் 34 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நொச்சியாகம நகரை நோக்கி பயணித்த போது இந்த விபத்திற்குள்ளானதாகவும் மற்றும் விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாலும் மற்றும் பேருந்து சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம போக்குவரத்து காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதியை நொச்சியாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version