இலங்கை

பாண் விலை தொடர்பில் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை

Published

on

பாண் விலை தொடர்பில் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை

பாண் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தலைவர் டி.ஐ.உடுவர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சட்டப்படியான எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை சோதனையிட்டதில் 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version