இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

இதன்படி முப்பது இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சொத்துப் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன் சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு சட்டத்தின்படி சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version