இலங்கை

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு! மக்களுக்கான சலுகைகள் குறித்து நடவடிக்கை

Published

on

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு! மக்களுக்கான சலுகைகள் குறித்து நடவடிக்கை

சமையல் எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றின் விலை குறைப்பிற்கான சலுகைகளை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version