இலங்கை

மருந்து கொள்வனவு: விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை அதிகரிப்பு

Published

on

மருந்து கொள்வனவு: விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை அதிகரிப்பு

சுகாதார அமைச்சினால் மருந்து விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை 800 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பை சேர்ந்த வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்காக இவ்வாறு பல மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம், மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version