இலங்கை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பேருந்து விபத்து

Published

on

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பேருந்து விபத்து

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்தும் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறி புற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version