இலங்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

Published

on

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே எதிர்க்கட்சியினர் இச்சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதற்கான எந்த வித தீர்மானத்தையும் அமைச்சரவை மேற்கொள்ளவில்லை.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காகவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக வைத்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் மற்றும் தொடருந்து தொழிற்சங்கத் தலைவர்களும் பயங்கரவாதிகளே என்றும் அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

Exit mobile version