இலங்கை

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து

Published

on

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து

புத்தளம் (Puttalam) – அனுராதபுரம் (Anuradhapura) பிரதான வீதியில் உள்ள நீர் வழங்கல் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக சொகுசு காருடன் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்று (11.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

அனுராதாபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்றுடன் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

இதன்போது, கார் தலைகீழாக புரண்டு முற்றாக சேதமாகியுள்ளது.

அதேவேளை, காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும், கெப் ரக வண்டியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version