இலங்கை

இந்தியாவின் கவலைகளைப் புறக்கணித்த இலங்கை., வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி

Published

on

இந்தியாவின் கவலைகளைப் புறக்கணித்த இலங்கை., வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி

சீன உளவு கப்பல்கள் குறித்த இந்தியாவின் ஆட்சேபனை மற்றும் கவலைகளை  இலங்கை புறந்தள்ளுகிறது.

வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் மீதான தடையை நீக்க  இலங்கை முடிவு செய்துள்ளது.

ஜப்பானுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry), அந்நாட்டு ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

இந்த சூழலில் சீன கப்பல்களை மட்டும் தடை செய்ய முடியாது என்று சப்ரி கூறினார்.

மற்ற நாடுகளுக்கிடையே நிலவும் சர்ச்சைகளுக்கும் தனது நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி வரை தடை நீடிக்கும் என்றும், அதன் பிறகு வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை தடை செய்யாது என்றும் சப்ரி கூறினார்.

இதற்கிடையில், இரண்டு சீன கண்காணிப்பு கப்பல்கள் நவம்பர் 2023 வரை இலங்கை துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்கப்பட்டன.

இதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன. அத்தகைய கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.

இதன் விளைவாக, இந்த ஆண்டு ஜனவரியில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் நுழைவதற்கு  இலங்கை தடை விதித்தது.

இருப்பினும், ஒரு சீன கப்பலுக்கு விதிவிலக்கு அளித்தது. மறுபுறம், வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான தடையை அடுத்த ஆண்டு முதல் நீக்க  இலங்கை முடிவு செய்துள்ளது.

Exit mobile version