Connect with us

இலங்கை

சம்பந்தனின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்த ரணில்

Published

on

tamilni Recovered 2 scaled

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் (R. Sampanthan) எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தி இரங்கலைத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் அதற்காக அவர் பல பணிகளை செய்துள்ளதாகவும் அதிபர் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இரா. சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அதிபர் தெரிவிக்கையில், “நான் இந்த உரையாற்றும் போது, அன்று என்னுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தற்போது எங்களுடன் இல்லை.

நானும் அவரும் மிகவும் கடினமான காலகட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் வழங்கிய பங்களிப்பை நான் அறிவேன்.

அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என பிரத்தியேகமான நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார்.

அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்களிப்பை செய்துள்ளார்.

அதனை நிறைவு செய்ய அதிகாரப் பகிர்வு மற்றும் மத்தியில் அதிகாரத்தை குறைப்பது தொடர்பாக இன்னும் சிறிய பணிகளை வேண்டியுள்ளது.

மேலும், அந்த பணிகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த கௌரவாகமாக இருக்கும்“ என தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்11 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2024 -துலாம் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்

இன்றைய ராசி பலனை (ஜூலை 4, 2024 வியாழக் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...

Rasi Palan new cmp 23 Rasi Palan new cmp 23
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 3, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண...

4 3 4 3
இலங்கை2 நாட்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத...

3 3
இலங்கை2 நாட்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்....

2 1 2 2 1 2
செய்திகள்2 நாட்கள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில் (India) பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் விருது வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

tamilni 1 tamilni 1
இலங்கை2 நாட்கள் ago

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

Rasi Palan new cmp 25 Rasi Palan new cmp 25
செய்திகள்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 2, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...