இலங்கை

கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – பலர் காயம்

Published

on

கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – பலர் காயம்

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தங்கொவிட்ட மற்றும் வெவெல்தெனிய பகுதிக்கு இடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும், கலென்பிடுனுவெவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது

Exit mobile version