இலங்கை

விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள்: நாமல் வெளியிட்ட அறிவிப்பு

Published

on

விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள்: நாமல் வெளியிட்ட அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirakanthan) எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) , நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version