இலங்கை

சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்தார் வியாழேந்திரன்

Published

on

சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்தார் வியாழேந்திரன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன்(viyalendran) சிறி லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவின் ஏற்பாட்டில் “நாட்டை வெல்லுங்கள் – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் வெல்லவாயவில் நடைபெற்ற மக்கள் பேரணியிலேயே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணியில் இணைந்துகொண்டார்.

அத்துடன் தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவும் இந்த கூட்டணியில் இணைந்து கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டமே இன்று (29) மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), மகிந்த அமரவீர(Mahinda Amaraweera), லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna), துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake), ஜகத் புஷ்பகுமார (jagath Pushpakumara), அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadarshana Yapa), நிமல் லான்சா (Nimal Lanza), எஸ்.வியாழேந்திரன், ஜகத் பிரியங்கர (Jagath Priyankara,) உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மேயர்கள், பிராந்திய சபை உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

அவரது அரசியல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடங்கி பின்னர் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கு மாறி தற்போது சுதந்திரகட்சியில் வந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version