Connect with us

இலங்கை

கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

Published

on

7 12

கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு மௌனம் : அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்திய மத்திய அரசால் மட்டும் கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தாலும் இன்னமும் தமிழக அரசு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பல தசாப்தங்களாக புரையோடிப்போகும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்(jaishankar), இலங்கைக்கான தனது சமீபத்திய விஜயத்தின் போது, ​​இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தன்னை புதுடெல்லிக்கு அழைத்ததாக அவர் கூறினார்.

“புது டெல்லியில் உள்ள இந்திய அரசாங்கத்தால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. நான் தமிழகம் வர வேண்டும். இந்த விவகாரத்தில் தீர்வு காண மாநில அரசு தயாராக இல்லை. அவ்வாறு செய்ய ஆர்வமாக இருந்தால், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு செல்லும் இழுவை படகு உரிமையாளர்களின் கடற்றொழில் உரிமத்தை ரத்து செய்வதன் மூலம் இதை எளிதாகச் செய்யலாம்,” என்றார்.

பெரும்பாலான இழுவை படகு உரிமையாளர்கள் தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் இப்பிரச்சனையை இராஜதந்திர வழிகள் மூலம் தீர்க்க கடினமாக உள்ளது என்றார் அமைச்சர்.

நூற்றுக்கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட இந்திய படகுகள் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளன என்றார். “இந்த அச்சுறுத்தல் காரணமாக எங்கள் மீனவர்கள் சில நேரங்களில் கடற்றொழிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.எங்கள் மக்களிடம் சிறிய கண்ணாடி இழை படகுகள் மட்டுமே உள்ளன,” என்றார்.

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி மாத்திரம் பேசுவதை விடுத்து, வடக்கில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கவில்லை எனவும் அமைச்சர் விமர்சித்தார்.

“13வது திருத்தத்தை முழுமையாகவோ, பாதியாகவோ அல்லது காலாண்டாகவோ நடைமுறைப்படுத்த முடியுமா என்று அவர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். இது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இதுதொடர்பில் மேலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு மிகவும் தீவிரமானது பொருளாதாரப் பிரச்சினை” என்று அவர் கூறினார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 23 Rasi Palan new cmp 23
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 3, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண...

4 3 4 3
இலங்கை20 மணத்தியாலங்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத...

3 3
இலங்கை22 மணத்தியாலங்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்....

2 1 2 2 1 2
செய்திகள்22 மணத்தியாலங்கள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில் (India) பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் விருது வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

tamilni 1 tamilni 1
இலங்கை22 மணத்தியாலங்கள் ago

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

Rasi Palan new cmp 25 Rasi Palan new cmp 25
செய்திகள்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 2, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூன் 30, 2024 ஞாயிற்று கிழமை)...