இலங்கை

யாழ்.காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிக்கு நேர்ந்த கதி

Published

on

யாழ்ப்பாணம் காவல்நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 3.800 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் யாழ் மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை விதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 12 ஆம் திகதி குறித்த கைதி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காவல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இதன் காரணமாக இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version