இலங்கை

தென்னிலங்கையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்

Published

on

தென்னிலங்கையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன நகருக்கு அருகில் கட்டிட உபகரண உரிமையாளர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு 10 மணி முதல் 11 மணி வரை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த கடையின் உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகளுடன் கடை நடத்தப்படும் கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வருகிறார்.

இறந்த தொழிலதிபர் கட்டிடத்தின் பின்னால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொழிலதிபருக்கு சொந்தமான லொறியில் பல தடவைகள் டீசல் திருடப்பட்டுள்ளதாகவும், லொறியை சோதனையிடச் சென்ற போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த வர்த்தகரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன நகருக்கு அருகில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

51 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version