இலங்கை

தேரர் தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

Published

on

தேரர் தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

குருநாகல் (Kurunegala) – கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாரவிட பிரதேசத்தில் தேரர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான முதியவர் உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08.06.2024) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கிரிஉல்ல மாரவிட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காயமடைந்த நிலையில், முதியவர் ஒருவர் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு அவரின் உறவினரான தேரர் ஒருவரினாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தேரர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் அவர் விகாரையொன்றில் பணிபுரியாமல் தனது தாயின் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபரான தேரர் தப்பிச் சென்றுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version