இலங்கை

ஜனாதிபதியை சந்தித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்

Published

on

ஜனாதிபதியை சந்தித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்றைய தினம் இரவு பத்தரமுல்ல பகுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 31 உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

மாவட்ட இணைப்புச் செயற்குழுக்களின் தலைவர்களும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் இந்த சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன கட்சியின் நிறைவேற்றுக் குழு இன்றைய தினம் காலை கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தின் போது கட்சியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version