இலங்கை

தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் சிக்கிய யுவதி

Published

on

தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் சிக்கிய யுவதி

வவுனியாவில் (Vavuniya) 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (04.06.2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 வயதினையுடைய யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட யுவதியை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version