இலங்கை

ரஷ்யா போருக்கு சென்ற நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மாயம்

Published

on

ரஷ்யா போருக்கு சென்ற நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மாயம்

ரஷ்ய – உக்ரைன் (Russian – Ukraine) போரில் இணைந்து கொண்ட முன்னாள் படையினரில் 330 பேரை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ரஷ்ய, உக்ரைன் போரில் பாதுகாப்பு முன்னரங்கில் போரில் ஈடுபட்டு வரும் முன்னாள் படையினரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போரில் ஈடுபட்டுள்ள முன்னாள் படையினரின் குடும்பங்களிடம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தங்களை மீளவும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் படைவீரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கோரியுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னாள் படையினரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version