இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

Published

on

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ரஷ்யா செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எம். யு. எம். அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படையினர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு வருவதாயின் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் அவசியம் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், வெளிவிவகார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கின் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Exit mobile version