இலங்கை

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் தகவல்

Published

on

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் தகவல்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்க அரசாங்கம் தயாராக இல்லை.

நாட்டின் கையிருப்பு தற்போது 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் நாட்டில் நாம் எதிர்நோக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு டொலர் கூட இல்லாத நிலையில் இருந்தோம். அதனால் இரண்டாயிரம் இறக்குமதியை நிறுத்த வேண்டியதாயிற்று.

இப்போது மற்ற அனைத்து தடையும் நீக்கப்பட்டுள்ளது. இப்போது வாகனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தேவைக்கேற்ப கொண்டு வரவும் அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாத் துறைக்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

தேவைக்கேற்ப வாகனங்களை அனுமதியுடன் கொண்டு வாரப்படும். இதை நாம் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மீண்டும் சிக்கிக் கொள்ளாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம்.

இப்போது எங்களிடம் 5.5 பில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது. நாட்டின் தேவைக்கேற்ப அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version