இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

Published

on

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கமானது சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையானது இன்று (20) முதல் மே 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்த சம்பளத்தை 25,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து, சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக முழு பல்கலைக்கழக அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.ஏ.டி.சுரஞ்சீவ (T.A.D. Suranjeeva ) தெரிவித்துள்ளார்.

Exit mobile version