இலங்கை

அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை

Published

on

அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடல் எல்லையை பயன்படுத்தாமல், எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் இதர வசதிகளை பெற அமெரிக்க ஆய்வு கப்பல் அனுமதி கோரியதால், சர்வதேச கடல் எல்லைக்கு சென்று அதற்கான வசதிகளை செய்து தர அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி குறித்த அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ளதாகவும், எனினும் இலங்கை சார்பில் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னர் சீனாவின் ஆய்வுக் கப்பல் ஒன்று நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையும் அரசால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version