இலங்கை

இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!

Published

on

இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!

இலங்கையில் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் வழிகள் குறித்து ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா விவாதித்துள்ளார்.

ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் மற்றும் அவரது குழுவினரை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தோஸ் ஜா சந்தித்துள்ளார்.

சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹாராஜால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையில் இராமாயணப் பாதைத் திட்டத்தின் தொடக்க நிகழ்விலும் சந்தோஸ் ஜா பங்கேற்றார்.

ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையானது அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பொறுப்பில் உள்ள அமைப்பாகும்.

இந்த நிலையில் இராமாயணம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும்.

Exit mobile version