இலங்கை

பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய மகிந்த

Published

on

பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய மகிந்த

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு (Palitha Thewarapperuma) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் மறைந்த பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), பாலித தெவரப்பெரும தேசத்தின் குடிமக்களுக்காகவும் அவர்களுக்காகவும் நின்று உழைத்த ஒரு அரசியல்வாதி என் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) இறுதிக் கிரியைகள் (Funeral) இன்று (19.4.2024) பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெறவுள்ளன.

பாலித தெவரப்பெரும (Palitha Thewarapperuma) தனது 64 ஆவது வயதில், கடந்த 16 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தேவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version