இலங்கை

தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் கார்

Published

on

தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் கார்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் (Samara Sampath Dasanayake) கார் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் பண்டாரவளை (Bandarawela) – ஹல்பே பகுதியில் இன்று (16.4.2024) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சாமர சம்பத் தசநாயக்க (Samara Sampath Dasanayake) மஹியங்கனையிலிருந்து எல்ல (Ella) பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் (fire department), எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version