இலங்கை

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

Published

on

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் (Sri Lanka Economy) ஸ்திரத்தன்மை அடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படவுள்ள திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் முன்னைய நிதியை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரிகளை உயர்த்தியுள்ளதுடன் சில மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் மீட்புக் கடனை இலங்கை பெற்றுள்ளது.

ஆனால், அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சிக்கன நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தக்கூடும்.

மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அது வாய்ப்புகளையும் பாதிக்கலாம் என்றும் ஆசிய வங்கி எச்சரித்துள்ளது.

Exit mobile version